உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருமலை சிறைச்சாலையினால் ஒழங்கு செய்யப்பட்ட பேரணி !

    எப்.முபாரக்       

 

              உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை சிறைச்சாலையின் புனர்வாழ்வு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொது மக்களைப் விழிப்பூட்டும் வகையிலான ஊர்வலமொன்று இன்று செவ்வாய்கிழமை  (1)திருகோணமலை சிறைச்சாலையின் அத்தியட்சகர் யு.ஜி.டபிள்யு.தென்னக்கோன் தலைமையில் நடைபெற்றது.        

20151201_092352_Fotor

 இவ்ஊர்வலத்தில் இருபத்தைந்து கைதிகள் கலந்து கொண்டதோடு இப் பேரணி  சிறைச்சாலையின் முன்றலில் ஆரம்பித்து திருகோணமலை பிரதான வீதியினூடாக சென்று என்.சி.வீதியினூடாக திருகோணமலை சிறைச்சாலையை சென்றடைந்தது.

20151201_094813_Fotor

இதில் எச்.ஐ.வி.எயிட்சிலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்,எயிட்ஸ் நோயிலிருந்து சமூகத்தைக் காப்போம் போன்ற சுலோகங்கங்களை தாங்கிய வண்ணம் கைதிகள் பேரணியில் ஈடுபட்டார்கள்.                                இந்நிகழ்வில் சிறைச்சாயின் பிரதான ஜேயிலர்,புனர்வாழ்வு அதிகாரிகள்,சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.

20151201_092247_Fotor