எனது காலத்தில் ஒட்ட இடமளிக்கப்படவில்லை…!

 

kothapaya

 

ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். 

இதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட அவரிடம் மாவீரர் தினத்திற்காக வடக்கில் போஸ்டர் ஒட்டப்படுவது குறித்து வினவப்பட்டது. 

இதற்கு பதிலளித்த கோட்டாபய, ” எனது காலத்தில் ஒட்டப்படவில்லை.. நான் இப்போது பாதுகாப்புச் செயலாளர் இல்லையே, எனது காலத்தில் ஒட்ட இடமளிக்கப்படவில்லை… அதனால் தான் ஆணைக்குழுவுக்கு வருகிறேன்..” எனக் குறிப்பிட்டார்.