பொத்துவில் ஸ்ரீ.ல.மு.கா. அமைப்பாளாராக வாஜித் நியமனம் !

 அஷ்ரப் ஏ சமத்

unnamed_Fotor

 பொத்துவில் பிரதேச  ஜெய்கா நகர், செங்காமம்,ஆத்திமுனை,ஹிஜ்ரா நகர் ஆகிய கிராமங்களில் நிலவும் குடிநீர்ப்பிரச்சினையை தீர்த்துவைக்க நீர் விநியோக வடிகாலமைப்புச் சபையின் உப தலைவா் சபீக் ரஜப்டீன் நடவடிக்கை.

பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாஜித்  மற்றும்  இலங்கை சுற்றுலாத்துறை சம்மேளனத்தின் தவிசாளர் ஜெளபர் ஆகியோா் கொண்ட குழு இன்று (18) தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு மற்றும் நகரங்கள் அபிவிருத்தி அமைச்சரும் சி.மு.கா. தேசியத் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் கவணத்திற்கு கொண்டுவந்தாா்கள். 

இதனைத்  தொடர்ந்து அமைச்சரின் பணிப்புரமைக்கமைய  ஸ்ரீ.மு.கா.வின் தேசிய அமைப்பாளரும், தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் உப தவிசாளருமான சபீக் ரஜாப்டீனினால் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு நிரந்தரத்தீர்வு கிட்டும் வரைக்கும்  குடிநீரை நாளாந்தம் பவுசர்களில் வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ,இதேவேலை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் பிரதேச அமைப்பாளராக முன்னாள் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாசித் நியமிக்கப்பட்டுள்ளார்.

 ரஜாப்தீன் அவர்களினால் அமைப்பாளருக்கான கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமின் சிபார்சின் பேரில் வாசித்திற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.