நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் அமைச்சரவைப் பத்திரம் நாளை !

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி அதன் அதிகாரங்களை பாராளுமன்றத்திடம் பகிர்ந்தளிக்கும் வகையிலான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை நாளை சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

மேலும் புதிய தேர்தல் முறை தொடர்பிலும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

அலரி மாளிகையில் இன்று நடைபெறும் நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.