ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் 7.0 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை!

 

ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் 7.0 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து நாட்டின் பல பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

images

இது குறித்து, ஜப்பான் வானிலையியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு கடற்கரையில் உள்ள ககோஷிமா எல்லை மற்றும் சட்சுனான் தீவுகளில் 3 அடி உயரத்திற்கு கடலலை சீற்றத்துடன் காணப்படுவதாகவும், 10 கி.மீ ஆழத்தில் மையமிட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.0 ரிக்டர் அளவிற்கு பதிவாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து கடற்கரையோரப்பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக வேறு இடத்திற்கு செல்லுமாறு ஜப்பான் வானிலையியல் நிறுவனம் அறிவுருத்தியுள்ளது.