சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களை மிரட்டி வரும் தொடர் மழை !

சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களை மிரட்டி வரும் தொடர் மழை மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை பல்கலைக்கழக மற்றும் உறுப்பு கல்லூரிகளுக்கு நாளை நடைபெற இருந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Chennai_Twitter_HERO

அதேபோல் சென்னை விவேகானந்தா கல்லூரியில் நாளை நடக்கவிருந்த தேர்வு 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

chennai-rain_650x400_61447405567
இந்நிலையில், தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி-கல்லுரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

chennai-rains