அறபுக் கல்லூரிக்கு 2016 புதிய மாணவர் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது !

பி. முஹாஜிரீன்
பாலமுனை, சின்னப்பாலமுனை ஸஹ்வா ஆண்கள் அறபுக் கல்லூரிக்கு 2016ம் ஆண்டுக்கான புதிய மாணவர்ககைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டள்ளதாக கல்லூரி அதிபர் அஷ்ஷேஹ் ஏ.ஆர். முகம்மது றமீன் மதனி தெரிவித்தார்.
விண்ணப்பதாரிகள் புனித அல்குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்திருப்பதுடன், 2016ல் தரம் 9 இற்கு சித்தியடைந்திருத்தல், சிறந்த உடல் ஆரோக்கியமுடையவராக இருத்தல் வேண்டுமென அறிவிக்கப்பட்டள்ளது.
அறபுக் கல்லூரியன் முறையான பாடத்திட்டத்திலான ஷரீஆ பாடங்களோடு க.பொ.த. சாதாரண தரம், க.பொ.த. உயர்தரம், அல்ஆலிம் முதவஸ்ஸிதா, அல்ஆலிம் தானவிய்யா, அஹதிய்யா, தர்மாச்சார்ய ஆகிய பரீட்சைகளுக்குத் தோற்றுவதற்கான முழுநேரப் பாடங்களும் சிறந்த ஆசிரியர்களையும் வளவாளர்களையும் கொண்டு போதிக்கப்படும்.
அத்துடன், கணினி பாடநெறியில் தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையினால் வழங்கப்படும் அரச அங்கீகாரம் பெற்ற Nஏஞ – 3 சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கான ஊயுயு -3இ ஊர்வு -3 சான்றிதழ்கள் பெறுவதற்கான பாடங்களும் போதிக்கப்படுகின்றன. 
மேற்படி தகைமைகளைப் பூர்த்தி செய்த, விருப்பமுடைய ஆண்கள் எதிர்வரும் 2015, டிசம்பர் 5 மற்றும் 6 (சனி, ஞாயிறு) ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை கல்லூரியில் நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
நேர்முகப் பரீட்சையில் பிறப்பச் சான்றிதழ், தரம் 09 இற்கு சித்தியடைந்ததை உறுதிப்படுத்தும் பாடசாலை விடுகைப் பத்திரம் அல்லத பாடசாலை அதிபர்  கடிதம், மாணவர் தேர்ச்சி அறிக்கை ஏனைய புலமைச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களும் அல்குர்ஆன் ஓதுதலும் பரீட்சிக்கப்படும்.
வுpண்ணப்பிக்க விருப்பமுடையவர்கள் மேலதிக தகவல்களக்கு 0672255049, 0774272919, 0758088164 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டள்ளது.