நடுக்கடலில் காணாமல்போன இலங்கை மீனவர்கள் சிலரை அமெரிக்க கடற்படை மீட்டுள்ளது!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுக்கடலில் காணாமல்போன இலங்கை மீனவர்கள் சிலரை அமெரிக்க கடற்படை பாதுகாப்பு குழுவொன்று மீட்டுள்ளது. 

நேற்றிரவு இந்திய பெருங்கடல் பகுதியில் நிர்க்கதிக்குள்ளான நிலையில் இலங்கைக் கொடியுடன் காணப்பட்ட படகில் இருந்த 06 இலங்கை மீனவர்கள் இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர். 

1438195636US

இவ்வாறு மீட்கப்பட்வர்கள் 300 மைல் கடற்தொலைவில் உணவு நீர் எதுவும் உட்கொள்ளாத நிலையில் செய்வதறியாது நிர்க்கதிக்குள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

அந்த மீனவர்கள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டத்தில் காணப்பட்டதாகவும், அதனையடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை ஏற்படுத்திக் கொடுத்து, உணவு பானங்கள் வழங்கியதாகவும் சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.​ 

இவ்வாறு மீட்கப்பட்ட இலங்கை மீனவர்களும் தற்பொழுது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.