மண்சரிவு காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

மண்சரிவு காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Unknown

சீரற்ற வானிலை காரணமாக பண்டாரவளை மற்றும் ஹீல்ஓயாவுக்க இடையிலான ரயில் பாதையின் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடட்டுள்ளது.

இதனால், மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து அதிகாலை 5.45 க்கு புறப்பட்ட ரயில், தாமதமாகவே கொழும்பை வந்தடையும் என்றும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.