சுகாதார அமைச்சர் நஸீரினால் அவசர சேவை வாகனம் உட்பட பல இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு!

பைஷல் இஸ்மாயில் –

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அவசர சேவைக்கான வாகனம் கையளிக்கும் நிகழ்வுடன் பல பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.நக்பர் தலைமையில் இடம்பெற்றது. DSC03524_Fotor

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் மாகாண பணிப்பாளர் ஆர்.சிறிதர், கல்முனை பிராந்திய சுகாதராப் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுத்தீன் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் பிரதம அதிதி மாகாண சுகாதார அமைச்சர் அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலைக்கு அவசர சேவைக்கான வாகனம், போட்டோக் கொப்பி இயந்திரம், பக்ஸ் இயந்திரம், ஜெனி மற்றும் வைத்தியசாலைக்கு பல தளபாடங்களை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் நக்பரிடம் கையளித்து வைத்தார்.
DSC03635_Fotor
இதில் அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதும், வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் அமைச்சரினால் ஆயுள்வேத சின்னம் சூட்டி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
DSC03587_Fotor