வீதி செப்பனிட்டுத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!

அபு அலா –

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை 11 ஆம் பிரிவு சரீப் ஹாஜியார் வீதியை செப்பனிட்டுத் தருமாறு அப்பிரதேச வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த பிரிவில் வசிக்கும் மக்கள் இவ்வீதி தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு முறையிட்டும் அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் ஒரு அசமந்தப்போக்கில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

a_Fotor

இவ்வீதியால் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறித்த வீதியை தற்காலிகமாக கிரவல் மணல் போட்டு செப்பனிட்டுத் தருமாறும் அட்டாளைச்சேனை பிரதேச சபையினருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

 
a-2_Fotor