சுகாதார அமைச்சர் நஸீரின் தலையீட்டால் வீதிப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு!

அபு அலா –

 

கொங்றீட் வீதி அமைப்பது தொடர்பில் அட்டாளைச்சேனை ஆம் பிரிவில் வசிக்கும் குடும்பங்களிடேயே ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலையீட்டு அம்மக்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுக்கொடுத்தார்.  

a2_Fotor

சுமார் 10 இலட்சம் ரூபா நிதியின் மூலம் அட்டாளைச்சேனை 5 ஆம் பிரிவிலுள்ள வாய்க்கால்கட்டு வீதியை அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் நேற்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போதே, குறிப்பிட்ட இடத்தில் வசிக்கும் குடும்பங்களிடத்தில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் குறித்த இடத்துக்கு உடனடி விஜயத்தை மேற்கொண்டு அம்மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்தார்.

alm_Fotor

அப்பிரச்சினையை உடனடியாக போக்கும் வகையில், அமைச்சர் நஸீர் அது தொடர்பான அதிகாரிகளுக்கு அலைபேசி மூலம் அழைப்பு விடுத்தமைக்கு அமைவாக அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.அஸ்லம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர் ஏ.எம்.ஹாறூன் ஆகியோர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு வருகை தந்து அம்மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் அப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

 

அத்துடன் அவ்வீதிக்கு இப்றாகீம் ஹாஜியார் வீதி என்ற பெயரை சூட்டுமாறும் அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கி வைத்தார். 

 

இம்மக்கள் மழை காலங்களில் வெள்ள நீரினால் பாதிப்படைந்து வருகின்றமையை கவனத்திற்கொண்ட கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் 10 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்து அம்மக்கள் மழை காலங்களில் வெள்ளத்தினால் பாதிப்படையாதவாறு வடிகான் திட்டத்துடன் இவ்வீதி கொங்றீட் வீதியாக அமைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.