இரண்டு இலட்சம் வீடுகளுக்கு இன்னும் மின்சார வசதி இல்லை என்கின்றார் அமைச்சர் !

ranjith siyamb
நாட்டிலுள்ள சுமார் இரண்டு இலட்சம் வீடுகளுக்கு இன்னும் மின்சார வசதி இல்லை என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 

இதுவரை 97 வீதமானவர்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

2016ம் ஆண்டாகும் போது அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதியை வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.