காதலி கொலை வழக்கில் கைதான பிஸ்டோரியஸ் விடுவிப்பு : வீட்டுக் காவலில் வைக்க உத்தரவு !

பாரா ஒலிம்பிக் வீரர் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் ஓராண்டுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காதலி கொலை வழக்கில் கைதான பிஸ்டோரியஸ், பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மீதமுள்ள 5 ஆண்டு கால சிறைத் தண்டனையை அவர் சீர்திருத்தக் கண்காணிப்பில் வீட்டுக் காவலில் அனுபவிக்க வேண்டும் என தென் ஆப்பிரிக்காவின் பரோல் சபை தெரிவித்துள்ளது.

oscar_pistorius_laureus

பிஸ்டோரியஸ் தனது காதலியான ரீவா ஸ்டீன்காம்பைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனையைப் பெற்றார்.

வீட்டிற்குள் யாரோ நுழைந்துவிட்டார்கள் என நினைத்து குளியலறை வழியாக தான் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே காதலியைத் தவறுதலாக சுட்டுவிட்டதாக பிஸ்டோரியஸ் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

இதனால், காதலியைக் கொலை செய்யும் நோக்கம் இருந்திருக்கவில்லை என்ற வாதத்தை ஏற்று, அவருக்கு நீதிமன்றம் திட்டமிடாத கொலைக்கான தண்டனையை அளித்திருந்தது.

ஆனால், அவர் குற்றநோக்கத்துடனேயே தான் இந்தக் கொலையை செய்தார் என அரச தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.