ரவி ராஜ் கொலை ஐந்து கடற்படை வீரர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் !

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து கடற்படை வீரர்களுக்கும் எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

spotlight-10
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

2006ம் ஆண்டு நவம்பர் 10ம் திகதி நடராஜா ரவிராஜ் கொழும்பில் வைத்து சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பில் ஐந்து கடற்படை வீரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இதற்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.