சினேக பூர்வ ரீ-20 கிரிக்கட் போட்டி !

எஸ்.அஷ்ரப்கான்

சாய்ந்தமருதின் முன்னணி கழகங்களான  ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம் மற்றும் பிளைங் ஹோர்ஸ் விளையட்டுக் கழகங்களுக்கிடையே நடைபெற்ற சினேக பூர்வ ரீ-20 கிரிக்கட் போட்டி  மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி நிறைவுபெற்றது. 

 fg_Fotor

நேற்று (17)  சனிக்கிழமை சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற இப்போட்டியில் நாணையச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம் நிர்ணயிக்கப்பட்ட 17 பந்து வீச்சு ஓவர்களை எதிர் கொண்டு விக்கடுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அணித் தலைவர் எஸ்.றிழ்வான் 27 பந்துகளில் ஆறு, 7 நான்கு அடங்கலாக 57 ஓட்டங்களைப்     பெற்றார்.
 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழக அணியினர் 15 பந்து வீச்சு ஓவர்கள் முடிவில் விக்கடுகளை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை காலநிலை இடமளிக்காததினால் போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவுக்கு வந்தது. இரு அணியினரும் இங்கு சிறப்பாக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது