நாட்டில் எதிர்பார்த்த நல்லாட்சி மலரவில்லை , மஹிந்தவை தோற்கடித்தது நானே : சரத் பொன்சேகா !

ஜவ்பர்கான்
நாட்டில் மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சி இன்னும் மலரவில்லை.அரசாங்கம் மக்கள் எதிர்பார்த்த திசையில் செல்லவேண்டுமானால் மஹிந்தவுடன் ஒட்டியிருந்தவர்கள் தோற்கடிக்கப்படவேண்டும்.இவ்வாறு மட்டக்களப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாநாக கட்சியின் தலைவர் பீல் மாஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

IMG_1229_Fotor
மட்டக்களப்பு கூட்டுறவு மணடபத்தில் நடைபெற்ற ஜனநாயக கட்சி மாவட்ட பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.எச்.எம்.சாபி தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் மேல் மாகாண சபை உறுப்பினர் இந்திக பண்டார உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

 

IMG_1241_Fotor
எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஜனாநாயக கட்சி நாடுமுழுவதிலும் தனித்து போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து பேசிய பொன்சேகா மஹிந்த ராஜபக்ஸவை தோற்றகடித்தது நான்தான்.மஹிந்தவை சுற்றியிருந்த பலர் இப்போது இந்த அரசாங்கத்தையும் சுற்றியுள்ளனர்.அவர்களையும் தோற்கடிக்கவேண்டும் மஹிந்தவை தோற்கடித்த என்கு அவர்களை தோற்கடிப்பது பெரியவிடயமல்ல என்றார்.

_MG_1303_Fotor