பிரதமர் சிங்கப்பூர் நோக்கி இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் !

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார்.

images

இவர் இன்று பிற்பகல் 12.10 மணியளவில் சிங்கப்பூர் நோக்கி பயணமானதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இவருடன் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயத்தின் போது, சிங்கப்பூர் பிரதமருடன் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு கலந்துரையாடலும் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு சிங்கப்பூரின் ஆதரவையும் நிதியுதவிiயும் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடப்படவுள்ளது.