மட்டக்களப்பு நகர முஸ்லிம் வர்த்தகர்களுக்கான அறிவூட்டல் கருத்தரங்கு !

பழுலுல்லாஹ் பர்ஹான்
 
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தினால் மட்டக்களப்பு நகர முஸ்லிம் வர்த்தகர்களுக்கான அறிவூட்டல் கருத்தரங்கு நேற்று 11 ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி-01 இமாஸா ஹாட்வெயாருக்கு அருகாமையில் அமைந்துள்ள திறந்த கல்வி நிலையத்தில் இடம்பெற்றது.
 
2-DSC_0359_Fotor
இவ் அறிவூட்டல் கருத்தரங்கில் மாகாண இறைவரித் திணைக்களத்தின் வரி மதிப்பாளர் ஐ.எம்.றூமில் வரிவிதிப்பு தொடர்பில் கருத்துரை வழங்கினார்.
 
இதில் மட்டக்களப்பு நகர முஸ்லிம் வர்த்தகர்கள், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
3-DSC_0390_Fotor
 
உங்கள் வியாபார முன்னேற்றத்திற்கு வரி விதிப்பு ஒர் தடையா எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற மேற்படி அறிவூட்டல் கருத்தரங்கில் வரி அறவிடும் நிறுவனங்கள்,வரிவிதிப்பு ,வரி அறவீடு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துரை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
6-DSC_0372_Fotor
4-DSC_0362_Fotor 10-DSC_0380_Fotor 11-DSC_0361_Fotor