இலங்கையின் மத, கலாசாரங்களை பாதுகாப்பதற்கு அமெரிக்கா நிதியுதவி!

 

இலங்­கையின் மத, கலா­சார பாரம்­ப­ரி­யங்­களை பாது­காக்கும் தொடர்ச்­சி­யான முயற்­சி­களின் ஒரு அங்­க­மாக, புரா­தன பௌத்த ரஜ­கல மடா­ல­யத்தை மீள­மைத்தல் மற்றும் அனு­ரா­த­புர தொல்­பொருள் அருங்­காட்­சி­ய­கத்தை பாது­காத்தல் என்­ப­வற்­றுக்­காக அமெ­ரிக்கா 300,000 அமெ­ரிக்க டொலர்­களை நன்­கொ­டை­யாக வழங்­க­வுள்­ளது.

 

 

இவ்­வி­டயம் தொடர்பில் இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் தூத­ரகம் விடுத்­துள்ள ஊடக அறிக்­கையில் தெரி­விக்கப் பட்­டுள்­ள­தா­வது, இலங்­கையின் மத மற்றும் கலா­சார பாரம்­ப­ரிய பகு­தி­களை பாது­காப்­பதன் முக்­கி­யத்­து­வத்தை அமெ­ரிக்கா அறிந்து வைத்­துள்­ளது. 2005 ஆம் ஆண்டு முதல் இதற்­காக 100 மில்­லியன் இலங்கை ரூபாய்­களை வழங்­கி­யுள்­ளது.

 

இலங்­கையின் கலா­சார பராம்­ப­ரிய தலங்­களை பாது­காப்­ப­தற்­கான எமது ஒத்­து­ழைப்­பா­னது, சர்­வ­தேச விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தவும், சுற்­று­லாத்­து­றைக்­கான ஊக்­கத்தை வழங்­கவும், மக்­க­ளுக்­கி­டை­யி­லான புரிந்­து­ணர்வை உரு­வாக்­கவும் உதவும் என நம்­பு­கின்றோம்.

 

ரஜ­கல மடா­ல­யத்தின் மீள­மைத்தல் பணி­க­ளுக்­காக கலா­சார பாது­காத்­த­லுக்­கான தூது­வரின் ஒதுக்­கப்­பட்ட நிதியின் ஊடாக அமெ­ரிக்கத் தூத­ர­கத்­திடம் இருந்து ெஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழகம் 150,000 அமெ­ரிக்க டொலர்­களைப் பெறும். மடா­ல­யத்தின் முழு­மை­யான நில ஆய்வு மற்றும் பழங்­கால பௌத்த துற­வி­களால் பயன்­ப­டுத்­தப்­பட்ட மிகவும் முக்­கி­ய­மான நினைவுச் சின்­னங்­களை பாது­காத்தல் என்­ப­வற்­றிற்­காக இந்த நிதி பயன்­ப­டுத்­தப்­படும்.

us

2013ஆம் ஆண்டு வழங்­கப்­பட்ட நன்­கொ­டையைத் தவிர, இந்த செயற்­றிட்­டத்­திற்­காக அமெ­ரிக்­காவால் வழங்­கப்­படும் இரண்டாம் கட்ட நிதி­யாக இது உள்­ளது. இலங்­கையின் பௌத்த துற­வி­களின் வாழ்க்கை முறை குறித்து மேலும் கற்றுக் கொள்­வ­தற்கு அமெ­ரிக்­கா­வு­ட­னான எமது பங்­கா­ளித்­துவம் மிகவும் முக்­கி­ய­மா­னது என ெஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தின், வர­லாற்று மற்றும் தொல்­பொ­ரு­ளியல் பிரிவின் தலைவர், பேரா­சி­ரியர் பி.பீ. மன்­டா­வல தெரி­வித்­துள்ளார்.

இந்த புதிய நன்­கொ­டையின் கீழ், இலங்­கையின் தொல்­பொருள் திணைக்­க­ளத்­திற்கு வழங்­கப்­படும் 150,000 அமெ­ரிக்க டொலர்கள் பெறு­ம­தி­யான நன்­கொ­டை­யா­னது, அனு­ரா­த­புரம் தொல்­பொ­ரு­ளியல் அருங்­காட்­சி­ய­கத்தில் தொல்­பொ­ருட்­களை சிறப்­பாக களஞ்சியப்படுத்தவும், பாதுகாப்பதற்கும் உதவும்.

2005ஆம் ஆண்டு முதல், கலா­சார பாது­காப்­புக்­கான தூது­வரின் ஒதுக்­கப்­பட்ட நிதியின் ஊடாக இலங்­கையில் இது­வரை மொத்­த­மாக 730,000 டொலர்­களை, அமெ­ரிக்கத் தூத­ரகம் நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்­ளது எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.