சம்மாந்துறையில் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் !

 

இன்று 25-09-2015 வெள்ளிக் கிழமை சம்மாந்துறை ஹிஜ்றா சந்தியில் ஜும்மா தொழுகையினைத் தொடர்ந்து சம்மாந்துறை இளைஞர்களினால் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

12025481_1671533933093920_1916547946_n_Fotor

இக் கண்டன ஆர்பாட்டத்தில் பெரும் திரளான சம்மாந்துறை இளைஞர்கள் கலந்து கொண்டதோடு சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கோசங்களினை உணர்வு பூர்வமாக எழுப்பி இருந்ததனையும் அவதானிக்க முடிந்தது.

12025533_1671530259760954_493332998_n_Fotor

இவர்களின் கோசங்கள் “இலங்கையில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகத்தினை கண்டித்தல்,சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு மரண தண்டனையினை அமுல்படுத்த இலங்கை அரசிற்கு அழுத்தத்தினை வழங்குதல்” போன்றவற்றினை மையப்படுத்தி இருந்தது.இவர்களின் இவ் ஆர்பாட்டமானது இளைஞர்கள் மத்தியில் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான விழிர்ப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டுவதோடு மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் வழி கோலியுள்ளது எனலாம்.

12026465_1671533393093974_2073492317_n_Fotor

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்