நிந்தவூரிலும் சிறப்பான ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டங்கள் !

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் 
அம்பாரை நிந்தவூர் வாழ் முஸ்லீம் மக்கள் இன்று(24) தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பொருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

பள்ளிவாசல்களிலும், திறந்த மைதானங்களிலும் பொருநாள் தொழுகைகள் இடம் பெற்றன.

IMG_7472_Fotor

நிந்தவூர் பிரதேச ஜாமிஉத் தஃஹீத் ஜமாஅத்தினர் அல்-அஷ்ரக் தேசியக் கல்லூரி மைதானத்தில் தொழுகையிலும், குத்பா பிரசங்கத்திலும் ஈடுபட்டனர். சங்கைக்குரிய உலமா எம்.எச்.றியாழ் மௌலவி காஸிபி அவர்களினால் தொழுகை, குத்பா பிரசங்கம் என்பன நிகழ்த்தப்பட்டன.

 

IMG_7476_Fotor

இதே வேளை நிந்தவூர் பிரதேச தப்லீக் ஜமாஅத்தினர் நிந்தவூர் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டனர். சங்கைக்குரிய உலமா அல்ஹாபீஸ் ஏ.எம்.றிபாய் மௌலவி பெருநாள் தொழுகை நடாத்த, சங்கைக்குரிய உலமா எம்.எல்.மின்ஹாஜ் முப்தி அவர்களினால் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது.