இறை தியாகத்தை உலகறியச் செய்த திருநாள் : அலிசாஹிர் மௌலானாவின் வாழ்த்து !

 “இறை தியாகத்தை உலகறியச் செய்த – இத்தியாகத் திரு நாளாம் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தினிலே – தியாக உணர்வும் , இறை அச்சமும் , மனித நேய-நற்பண்புகளும் எமக்குள் மேலோங்க உறுதி பூளும் நாளாக இப்பெருநாள் தினம் அமைய எல்லாம் வல்ல நாயனை வேண்டியவனாய் – ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய நெஞ்சங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியை அடைகின்றேன் “-
ali sahir mowlana
இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா அவர்கள் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது –
அத்துடன் , இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ் கடமை உலகிற்கு உணர்த்தும் பாடமான ஐக்கியம்  , சகோதரத்துவம்  , தியாக சிந்தனை என்பவற்றை அனைவரும் முன் மாதிரியாக கொண்டு பற்றுறுதியுடன் செயற்பட்டு ஈருலக வாழ்விலும் வெற்றி பெற திட சங்கற்பம் பூளுவதுடன் – இத்தியாகத் திரு நாளிலே உலகளாவிய ரீதியில் அல்லலுறும் எம் சகோதர முஸ்லிம்களின் விமோசனத்திட்காகவும் நிம்மதியான வாழ்விற்காகவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக –
அனைவருக்கும் இனிய ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் –
என பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது –