தியாகங்களே  பாடங்களாகின – அதாஉல்லாஅவர்களின் ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துச்செய்தி !

தேசிய  காங்கிரஸின்  தலைவரும் , முன்னாள் அமைச்சருமான

அல் -ஹாஜ்  ஏ .எல் .எம்.அதாஉல்லாஅவர்களின் ஹஜ்ஜுப்பெருநாள்  வாழ்த்துச்செய்தி

உலக முஸ்லிம்கள் அனைவரும் இன்று தியாகத்திருநாள் ஹஜ்ஜுப்பெருநாளை   கொண்டாடுகின்றனர். அவர்கள் வாழுகின்ற இடங்களிலெல்லாம் நிம்மதியோடு வாழ பிரார்த்திக்கின்றேன்.  குறைகள்  நீங்கி  பெரு வாழ்வும்   பிரார்த்திக்கின்றேன். 

CSC_0090

நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் தனது செல்வப்புதல்வன் இஸ்மாயில் ( அலை )  அவர்களை  அறுக்க  கணவு  கண்டு அதனை தியாகத்தோடு  நிறைவேற்ற  துணிந்த  போது தியாகம்  உலகிற்கு எடுத்துக்காட்டபட்டது .அதில் அவர்  வெற்றி பெற்றார் . இவ்வாறு  இறுதி நபி  முஹம்மது  நபி  (ஸல் ) அவர்கள் வரையும் எல்லா  நபிமார்களும் தியாகத்தின்  மூலமாகத்தான் வெற்றி  பெற்றனர் .அதன் பிரதிபலன் தான் இன்றைய வியாபகமான இஸ்லாமிய உலகு . அத் தியாகங்கள் பாடங்களாக  வரலாற்றில்  மாறின .

தியாகம் தனி மனிதனோடு இணைந்திருக்கக்கூடிய நற் பண்ன்பாகும் தாய் தந்தையரின் தியாகங்கள் ,ஆசிரிய மாணவர்களின் தியாகங்கள் ,அரச-அரசியல் வாதிகளின் தியாகங்களினால் சமூகம் அடைந்த அடைவுகளை வரலாற்றில் நாம் அறிந்திருக்கின்ரோம். அவைகள் நமக்கு பாடங்களாயும், முன்னுதாரணங்களாயும் அமைந்தன. அல்ஹம்துலில்லாஹ். தியாகங்கள் தொடரட்டும் .

ஹஜ் கடமையை நிறைவேற்றுவதர்க்கு புனித மக்கமாநகரம் சென்றுள்ள ஹஜ்ஜாஜிகளின் ஹஜ் கடமைகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு  அவர்களின்  நியாயமான  பிரார்த்தனைகலும் நிறைவேறட்டும். 

ஏ .எல் .எம்.அதாஉல்லா 

தலைவர் – தேசிய  காங்கிரஸ் 

முன்னாள்  அமைச்சர்