ஐமசுகூ உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் !

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தில் இருந்து வௌியேறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

நிதி தொடர்பிலான ஒழுங்கு விதிகள் குறித்து பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் விவாதத்தை புறக்கணித்தே இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

parliament

குறித்த விவாதம் தொடர்பில் தமக்கு போதுமான காலஅவகாசம் வழங்கப்பட்டவில்லை என்பதே இதற்குக் காரணம் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.