மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 15 வருட நினைவு தினம் லண்டன் மில்டன் கின்ஸ் நகரில் இடம்பெற்றது !

லண்டனிலிருந்து மீரா அலி ரஜாய்

 மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 15 வருட நினைவு தினம் ஐக்கிய இராச்சிய லண்டன் மில்டன் கின்ஸ் நகரில் இடம்பெற்றது .

“தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் தலைமைத்துவ வழிகாட்டலும் அது கற்றுத்தந்த பாடங்களும் ” என்கின்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு இடம்பெற்றது .

இந் நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டிருந்தனர் .

இந் நிகழ்வுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் , நகர அபிவிருத்தி , நீர் வளங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பெருந் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் பற்றி கண்கள் கசிந்தவாறு உருக்கமான ஒரு உரையை நிகழ்த்தி இருந்தார் .

இந் நிகழ்வில் விசேட அதிதிகளாக வைத்திய நிபுனர் எம். ரயீஸ் , கல்முனையைச் சேர்ந்த வைத்தியர் ரிசான் ஜெமீல் , ஊடகவியலாளர் இர்பான் இக்பால் , சட்டத்தரணி சமீம் , ஆகியோரும் கலந்து கொண்டனர் .

IMG_2144_Fotor IMG_2097_Fotor IMG_2099_Fotor IMG_2102_Fotor
1_FotorIMG_2110_Fotor IMG_2121_Fotor IMG_2112_Fotor