இம்­மாத இறு­தியில் மைத்திரி-ஒபாமா நியூ­யோர்க்கில் விசேட சந்­திப்பு !

 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா ஆகிய இரு­வ­ருக்­கு­மி­டையில் இம்­மாத இறு­தியில் நியூ­யோர்க்கில் விசேட சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

Collage

எதிர்­வரும் 30ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் அமர்வில் கலந்து கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நியூயோர்க் செல்­ல­வுள்ளார்.

அதன்­போதே இவ்­விரு தலை­வர்­க­ளுக்­கு­மி­டையி­லான சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இது குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

இச்­சந்­திப்பின் போது விசே­ட­மாக இலங்கை இரா­ணுவ வீரர்­களை மாலி ராஜ்­யத்­தி­லுள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் சமா­தானப் படையில் இணைத்துக் கொள்­வது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்பில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள அறிக்­கையில் போர்க்­குற்றம் தொடர்­பான விட­யங்கள் குறித்து அவ­தானம் செலுத்தும் போது, இலங்கை இரா­ணுவ வீரர்கள் ஐக்­கிய நாடுகள் சபையின் சமாதானப் படையில் இணைத்துக் கொள்ளப்படுவது மிகவும் சாதகமானதொரு விடயமாகுமென அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.