தேசியப்பட்டியல் உறுப்பினர் இராஜினாமா , புதிய ஒருவர் நியமிக்கப்படுவார் !

அபு அலா –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 2 தேசியப்பட்டியல் உறுப்பினரில் ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்வதன் மூலம் புதிய உறுப்பினர் ஒருவர் இம்மாதம் மூன்றாம் வாரத்தில் நியமிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

unnamed

கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (13) கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையினால் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரின் ஒருவர் எனது சகோதரராவார். அவர் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு அவரின் கண்னியுரையையும், இறுதி உரையையும் நிகழ்த்திய பின்னர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜனிமா செய்யவுள்ளார்.

இந்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி எந்த மாவட்டத்திற்கு வழங்கப்படும், அந்த  உறுப்பினர் பதவியை யாருக்கு வழங்கப்படும் என்ற விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட முடியாது என்றார்.