மார்ச்சில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல்…..!

 

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்­ள­தாக அர­சாங்க தரப்­பி­லி­ருந்து தெரிய வரு­கி­றது. நாடு ­பூ­ரா­க­வு­முள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் 335 இல் 301 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்­ளது. இதே­வேளை ஏனைய 34 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பதவிக் காலம் அடுத்த மாதம் 15 ஆம் மற்றும் 31 ஆம் திக­தி­க­ளுடன் நிறை­வ­டை­ய­வுள்­ளன.

images

 

பத­விக்­காலம் முடி­வ­டைந்­துள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் நிர்­வா­கங்கள் விசேட ஆணை­யா­ளர்­களின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. அடுத்த மாதம் பத­விக்­காலம் நிறை­வ­டை­ய­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் நிர்­வா­கமும் தேர்தல் நடை­பெறும் வரையில் விசேட ஆணை­யா­ளரின் கீழ் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளன.

எனவே நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை தொகு­தி­வாரி முறையில் நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. அது தொடர்­பி­லான எல்லை நிர்­ணய வர்த்­த­மானி அறி­வித்தல் விரைவில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலைத் தொடர்ந்து இவ்­வ­ரு­டமே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடை­பெறும் என ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் எதிர்­வரும் நவம்பர் மாதம் புதிய பாரா­ளு­மன்­றத்தின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளதால் இவ்­வ­ருடம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை.ஆகையினால் எதிர்வரும் மார்ச்மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிய வருகிறது.