எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட வேண்டுமென த.தே. கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தீர்மானம்!

 

எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

R.Sampanthan

இன்று கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவராக இரா. சம்பந்தன் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதுதவிர, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேலும் சில பதவிகளுக்கும் இந்த கூட்டத்தின்போது உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளதுடன் கூட்டமைப்பின் பேச்சாளராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.