ஆட்சி அமைக்க மகிந்த ராஜபக்சவின் அணியில் உள்ள சிலர் எங்களுடன் பேசுகின்றனர் !

 

அஸ்ரப் .ஏ .சமத்

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க பிரதம மந்திரயாக தெரிபு செய்யப்பட்டதன் பின்னா் இன்று கொழும்பு பெரிய பள்ளிவசால் கொட்டேகேன ஹிந்து கோவிலுக்கு விஜயம் மேற்கொண்டாா்.
ranil
இங்கு பிரதமருடன் பெரிய பள்ளிவாசலுக்கு  வருகை தந்திருந்த –  ஜ.தே.கட்சியின் செயலாளா்  ஹபீா் ஹாசீம்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் –
அமைச்சரவை நியமிப்பதில் மேலும்  2 அல்லது 3 நாட்கள் பிட்போடப்பட்டுள்ளது.   ஜ.தே.கட்சிக்கு 106 ஆசனங்கள் கிடைத்துள்ளது. எங்களோடு ஆட்சியமைப்பதற்கு இன்னும் 10 ஆசன்ஙகள் மட்டுமே தேவைப்படுகின்றன. 
 மகிந்த ராஜபக்சவில் உள்ள அணியில் சிலா் எங்களுடன் பேசுகின்றனா்.  அத்துடன் ஸ்ரீ.ல.சு.கட்சியில் உள்ள சிலரும் எங்கள் கட்சியில் இனைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனா்.  
தேசிய அரசாங்கம் பேச்சுவாா்த்தை சரிவரும் பட்சத்தில் ஆட்சியமைப்போம் அல்லது எங்களுடன் இனைய உள்ள பாராளுமன்ற உறுப்பிணா்களையும் சோ்த்து  125  பாராளுமன்ற உறுப்பிணா்களைக் கொண்டு ஆட்சியமைக்க முடியும். அதற்காகவும் நாங்கள் பேசுகின்றோம். அதுமட்டுமல்ல ஜே.வி.பி  மற்றும் ரீ.என்.ஏ யும் எங்களுக்கு ஆதரவு அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளனா்.
ranil 2
யுத்தம் முடிவுற்றாலும் அந்த யுத்த பின்னரான நடைமுறைகள் மக்களிற்கு ஒரு நிரந்தர சமாதானம் இன்னும் முடிவுரவில்லை. 
தேசிய அரசாங்கம் அமை்பபதில் பல சிக்கல் கள் உ ள்ளன. அமைச்சுக்கள் பறிமாறுவது. மற்றும் தீா்வுத்திட்டம், பல பிரச்சினைகள் உள்ளன. அவைகள் அனைத்தும் சுகமாக முடிவுக்கு வந்தால் நாங்கள்  தொடருவோம் அல்லது அப்பக்கத்தில் இருந்து வருபவா்களை இணைத்து பெரும்பாண்மைக் கொண்டு அரசாங்கத்தை அமைப்போம் என ஹபீா் காசீம் ஊடகங்களுக்கு தெரிவித்தாா்.