இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு சவூதி பயணமானது !

ஏ.எஸ்.எம்.ஜாவித்

புனித ஹஜ் கடமைக்கான முதலாவது சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானம சுமார் 180 ஹாஜிகளை ஏற்றிக் கொண்டு நேற்று  பிற்பகல் 2.15 மணிக்கு பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மக்காவின் ஜித்தா விமான நிலையத்தை நோக்கி பயணமாகியது.

IMG_7954

இவர்களை உத்தியோக பூர்வமாக வழியனுப்பி வைக்கும் வைபவம் இன்று (25) காலை 11.00 மணிக்கு விமான நிலையத்தில் இடம் பெற்றது. இதன்போது இலங்கைக்கான சவுதி அரேபியாவின் தூதரகதூதுவர், கவுன்சிலர் உள்ளிட்ட அதிகாரிகள், முஸ்லிம் சமய விவகார அமைச்சின் அதியாரிகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகாரிகள், ஹஜ் குழு அங்கத்தவர்களான வை.எல்.எம்.நவவி, மௌலவி தாசிம், எம்.எச்.எம். பாஹிம் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
IMG_7991

IMG_7997

IMG_8021