சிரியாவில் படையினர் நடாத்திய தாக்குதலில் 34 பேர் பலி !

 

சிரிய டமஸ்கஸ் நக­ருக்கு வெளி­யி­லுள்ள கிளர்ச்­சி­யா­ளர்கள் பலம்­பெற்று விளங்கும் தளங்கள் மீது அர­சாங்கப் படை­யினர் நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 12 சிறு­வர்கள், 8 பெண்கள் உட்­பட குறைந்­தது 34 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தது.

 

அந்­நாட்டின் தலை­ந­க­ருக்கு வட கிழக்­கே­யுள்ள டோமா பிராந்­தி­யத்தில் சிரிய ஜனா­தி­பதி பஷார் அல்–அஸாத்­தின் படை­யினர் பீப்பா குண்­டு­களை வீசி சனிக்­கி­ழமை தாக்­குதல் நடத்­தி­ய­தி­லேயே இந்த உயி­ரி­ழப்­புகள் இடம்­பெற்­றுள்­ளன.

syria_1

மேற்­படி தாக்­கு­தலில் இடிந்து விழுந்த கட்­டட இடி­பா­டு­களின் கீழ் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்கும் பணி தொடர்ந்து வரு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
இந்தத் தாக்­கு­தலில் சில குடும்­பங்கள் குடும்ப உறுப்­பி­னர்கள் அனை­வ­ரை­யுமே இழந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் மேற்­படி தாக்­கு­தலில் இடிந்து விழுந்த கட்­ட­ட­மொன்றின் இடி­பா­டு­களின் கீழ் சிக்­கிய நிலையில் உயி­ருடன் மீட்­கப்­பட்ட குழந்­தை­யொன்று தொடர்­பான புகைப்­ப­டங்கள் சர்­வ­தேச ஊட­கங்­களில் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன.

ஆனால் அந்தக் குழந்தை, அதற்கு ஏற்­பட்­டி­ருந்த கடும் காயங்கள் கார­ண­மாக பின்­னர்­ உ­யி­ரி­ழந்­துள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் தெரி­விக்­கி­றது.
அதே­ச­மயம் டோமா பிராந்­தி­யத்தின் ஒரு பகு­தி­யா­க­வுள்ள கிழக்குக் கோதா பிர­தே­சத்தை இலக்­கு­வைத்து ஞாயிற்­றுக்­கி­ழமை குறைந்­தது 11 வான் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­ட­தாக அந்த நிலையம் கூறு­கி­றது.

கிழக்கு கோதா பிராந்­தி­யத்தில் அர­சாங்கப் படை­யி­ன­ருக்கும் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்­கு­மி­டையே மோதல்கள் இடம்­பெ­று­வது வழ­மை­யா­க­வுள்­ளது.கடந்த 16 ஆம் திகதி டோமா பிராந்­தி­யத்தில் சிரிய அர­சாங்கப் படை­யினர் நடத்­திய வான் தாக்­கு­தல்­களில் 117 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.சிரியாவில் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மோதல்கள் ஆரம்பமானது முதற்கொண்டு இதுவரை 240,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்க ளில் அநேகர் பொதுமக்களாவர்.