தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிரில் ரமபோஷா பயணித்த விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கம் !

தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிரில் ரமபோஷா பயணித்த விமானம் அவசரமாக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

ஜப்பான் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த விமானமே அவசரமாக தரையிறக்கப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சு மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் சிரில் ரமபோஷாவுக்கு வரவேற்பளிக்கப்பட்டதாகவும் எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

தென்னாபிரிக்க உப ஜனாதிபதி உட்பட 7 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் விசேட விமானம் மூலம் இந்த பயணத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

விமானத்திற்குத் தேவையான எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர் காலை 10.15 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தென்னாபிரிக்க தூதுக்குழுவினர் பயணத்தை தொடர்ந்ததாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.