கல்முனையில் வாக்களிப்பு மந்த கதியில் !

kal_Fotor
எஸ்.அஷ்ரப்கான்
 இன்றைய பொதுத் தேர்தல் வாக்களிப்பில் கல்முனை பிரதேசத்தில்  இன்று அதிகாலை ஆரம்பித்து மதியம் 1 மணி வரை மித வேகமாகவே வாக்குப்பதிவுகள் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.
 இதேவேளை எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாத நிலையில் மிகவும் சுமுகமாகவும் பொலிசாரின் அதிஉச்ச பாதுகாப்பு அதிகாரங்களுடனும் வாக்களிப்பு இடம்பெற்றது. அந்த அடிப்படையில் குறித்த நேரம் வரை இங்கு 30 வீத வாக்குப்பதிவுகளே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.