அரச கால்நடை வைத்திய அதிகாரியினால் இலவசமாக கோழிக் குஞ்சுகள் வழங்கி வைப்பு !

f_Fotor

பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலத்தினால் நடுத்தர அளவிளான கோழிப் பண்னையாளர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலவசமாக கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு  பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலத்தில் இடம்பெற்றது.
இதன் போது காத்தான்குடி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி.லிங்கேஸ்வரன் டுஜித்திராவினால் தெரிவு செய்யப்பட்ட பண்னையாளர்களுக்கு இலவசமாக கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இங்கு காத்தான்குடி பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பத்து பண்னையாளர்களுக்கு மொத்தமாக 100 நூறு கோழிக் குஞ்சுகள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் ,கோழி வளர்ப்பு பற்றிய ஆலோசனையும் வழங்கப்பட்டது.
f2_Fotor