உளவு இயந்திர சாரதி தெய்வாதினமாக உயிர் தப்பினார்!

13_Fotorஅபு அலா 

 

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வாகன சாரதி தெய்வாதினமாக உயிர்தப்பினார்.

அட்டாளைச்சேனை வயல் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (05) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் முஹம்மட் அப்துல் சலாம் வயது (38) என்பவரே தெய்வாதினமாக உயிர்தப்பினார்.

வேளான்மை அறுவடை செய்த நெற்களை உளவு இயந்திரத்தில் கொண்டுவரும்போது உளவு இயந்திர சாரதிக்கு ஏற்பட்ட பதட்டம் நிலை காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த உளவு இயந்திரம் வீதியருகில் இருந்த வாய்க்காலினுள் பாய்ந்ததனாலேயே இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தினால் உளவு இயந்திரத்துக்கும் சாரதிக்கும் பாரியளவில் பாதிப்புக்கள் இல்லையென வாகன சாரதி தெரிவித்தார்.