தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரின் சமஷ்டி கோரிக்­கையை நாம் ஒரு போதும் ஏற்கப் போவது இல்லை!

ajith-p-perera_2கடந்த ஜனா­தி­பதி தேர்தலுக்கு முன்­னரும் அதற்கு பின்­னரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருடன் நாம் எவ்­வித ஒப்­பந்தங்­க­ளிலும் கைச்சாத்­தி­ட­வில்லை அந்­த­வ­கையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரின் சமஷ்டி கோரிக்­கையை நாம் ஒரு போதும் ஏற்கப் போவது இல்லை இதில் நாம் உறு­தி­யா­க­வுள்ளோம் என ஐக்­கிய தேசி­யக்­கட்சி தெரிவித்­தது.

 

ஐக்­கிய தேசி­யக்­கட்சி தலை­மை­ய­க­மான சிறிகொத்­தாவில் நேற்று புதன்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே கட்­சியின் களுத்­துறை மாவட்ட வேட்­பா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான அஜித் பி பெரேரா மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

கடந்த ஜனா­தி­பதி தேர்தலிலும் இம்­முறை பொதுத் தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் வடக்கு மாகா­ணத்­திற்கு சமஷ்டி நிர்­வா­கத்தை வழங்­கு­வது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்சி, எந்த இணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை. ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொள்­கை­யான ஒற்­றை­யாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு என்பதை தவிர சமஷ்டி நிர்­வா­கத்­திற்கு ஒரு போதும் இட­மில்லை.

சமஷ்டி குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தவும் சமஷ்டி வடி­வத்­தையோ, அர­சையோ கட்­டி­யெ­ழுப்ப ஐக்­கிய தேசியக் கட்சி இட­ம­ளிக்­காது.ஆனால், அதி­க­ளவில் அதி­கா­ரத்தை பர­வ­லாக்க ஐக்­கிய தேசியக் கட்சி தயாராக இருக்கின்றது. எனினும் அது ஒற்றையாட்சி என்ற கட்டமைப்புக்குள்ளேயே மேற் கொள்ளப்படும் என தெரிவித்தார்.