பொதுத் தேர்தலின் ஊடாக முயற்சிகளை மேற்கொள்ளும் சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும் – சந்திரிக்கா

Unknown

புதிய தேசமொன்றை கட்டியெழுப்புவதற்காக கிடைத்த பெறுமதிமிக்க சந்தர்ப்பத்தை இல்லாதொழிப்பதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக முயற்சிகளை மேற்கொள்ளும் சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயாக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கட்சியை பாதுகாக்க வேண்டுமாயின் முதலில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டியுள்ளதாகவும் ஜனவரி 8 ஆம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றியை பாதுகாப்பது மிக முக்கியமான விடயமாகும் எனவும் அறிக்கையொன்றின் மூலம் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்பிரகாரம் ஜனவரி 8 ஆம் திகதி நாட்டில் புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதற்காக பங்காற்றிய அனைத்து சக்திகளுடனும் ஒன்றிணைந்து அனைத்து தரப்புகளினதும் பங்களிப்புடன் வேறுபாடுகளை புறந்தள்ளி பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை பாதுகாத்தல் அர்பணிப்பு செய்துள்ள சக்திகள் மற்றும் தலைமைதுவங்களுடன் ஒன்றிணையுமாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து ஆதரவாளர்களிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிகார மோகத்தினாலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியும் சமூகத்தில் விஷம் கலக்கின்ற சக்திகளை தோற்கடித்தல் நாட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாததாகும் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காக ஜனவரி 8 ஆம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றியை முன்நோக்கி கொண்டு செல்லக்கூடிய பண்பாடுள்ள மக்கள் பிரதிநிகளை மாத்திரம் தெரிவு செய்வதற்கும்> பாராளுமன்றத்தை மக்களின் கௌரவமான அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற ஒரு நிறுவனமாக கட்டியெழுப்புவதற்கும் தேர்தலின்போது அனைத்து பிர​ஜைகளினதும் வாக்குகளை புத்திசாதூரியத்துடன் பயன்படுத்த வேண்டும் என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.