தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தயாரித்துள்ள தேசிய இணக்கப்பாடு மஹிந்தவிடம் கையளிப்பு !

Mahinda

தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தயாரித்துள்ள தேசிய இணக்கப்பாடு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

கொழும்பு விஹாரமாதேவி வெளியரங்கில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பல அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

5 பிரதான விடயங்களின் அடிப்படையில் இந்த இணக்கப்பாடு தயாரிக்கப்பட்டுள்ளதுடன் பல அமைப்புகளின் கையொப்பத்துடன் மஹிந்த ராஹபக்ஸவிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாவது :

வெளிநாட்டு டொலர்களுக்காக செயற்படுகின்ற அமைப்புகள் ஒன்றிணைந்து எம்மை தோல்வியடைய செய்ய முற்படுகின்ற போது , நாட்டை நேசிக்கும் மக்கள் எமக்காக ஒன்றிணைகின்றமையை பாரிய சக்தியாகவே நாம் கருதுகின்றோம். எமக்கிருந்த அச்சத்தை நீங்கள் நீக்கியுள்ளீர்கள். நாட்டின் ஐக்கியத்திற்காக செயற்படும் பொறுப்பை நாங்கள் ஏற்று கொள்கின்றோம்.