றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு காவற்துறையினரின் பாதுகாப்பு !

THAJUDEEN
பற்களையும் விலா எலும்பையும் உடைத்து கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாகி கொலை செய்யப்படடதாக கூறப்படும் பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கும் காவற்துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெஹிவளை வைத்தியசாலை வீதியில் உள்ள பள்ளிவாசல் அருகில் இருக்கும் மையவாடியில் தாஜூடீனின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. 

தாஜூடீன் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார். அவர் வாகன விபத்தில் இறந்ததாக காவற்துறையினர் அப்போது கூறியிருந்தனர். 

இந்த கொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாகவும் பேசப்பட்டது. 

மீண்டும் பிரேத பரிசோதனைக்காக சடலம தோண்டி எடுக்கப்படவுள்ள நிலையில், அதனை எவராவது முன்னதாகவே எடுத்து அகற்றி விடலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு காவற்துறையினர் பாதுகாப்பு வழங்கி வருவதாக காவற்துறையினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.