ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திற்கு சுகாதார அதிகாரிகள் விஜயம்!

பி. முஹாஜிரீன்
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திற்கு சுகாதார அதிகாரிகள் நேற்று (30) வியாழக்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர்.
DSCN2224_Fotor
அட்டhளச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டாக்கடர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில் சிரேஷ்ட சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர் ஏ.எம். ஜௌபர் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழு விஜயம் செய்து குறித்த பிரதேசத்தினை பரிசோதனை செய்தனர்.
மீன்பிடித் துறைமுகத்திலுள்ள மீன் சேகரிக்கும் நிலையத்தில் மீன் வெட்டுவதால் அதன் கழிவுகள் சரியான முறையில் அகற்றப்படாமையினால் அப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து இங்கு திடீர் விஜயம் செய்ததாக சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.
மீன் சேகரிப்பு நிலையத்தில் மீன் வெட்ட தடை செய்யப்பட்ட போதிலும் அதனை மீறி வியாபாரிகள் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தினை ஒரு வார காலத்துக்குள் துப்பரவு செய்யுமாறும் கழிவு நீரை சீரான முறையில் அகற்றுவதற்கு சம்மந்தப்பட்ட துறைமுக அதிகார சபையினர் வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் சுகாதார வைத்தியதிகாரி அறிவித்துள்ளார்.
இதனை மீறும் பட்சத்தில் துறைமுக அதிகார சபையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்துள்ளார். 
DSCN2220_Fotor