மைத்திரிபாலவையும் ,மகிந்தவையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழு இன்று ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழு இன்று புதன்கிழமை மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது.
இன்று மாலை கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அந்த குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கட்சி செயற்பாட்டாளர்கள் கூட்டத்தின் போது அடுத்த தேர்தலில் கட்சியை வெற்றி பெறச் செய்ய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒத்துழைப்பும் தேவையென  முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய, கட்சியை ஒன்றிணைக்கும் வகையிலான தீர்மானத்தை மேற்கொண்டு கட்சியின் முக்கியஸ்தர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, டிலான் பெரேரா, டி.பி. ஏக்கநாயக்க, ஜோன் செனவிரட்ண மற்றும் குமார வெல்கம ஆகியோர் உள்ளடங்கலாக 6 பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது.
இந்தக் குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்ததை தொடர்ந்து இன்றைய  தினம் மகிந்த ராஜபக்ஷவுடன் இது தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.