முன்னைய ஆட்சியின் இனவாத தூண்டுதல்கள் நல்லாட்சியிலும் தொடர அரசியல்வாதிகளே காரணம் :மரிக்கார்

அரசியல்வாதிகளே பிரிவினைவாதத்தை தோற்றுவிப்பதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். 

முன்னைய ஆட்சியின் இனவாத தூண்டுதல்கள் நல்லாட்சியிலும் தொடர்கின்றது. நல்லாட்சியில் எந்தவொரு பிரயோசனமும் இல்லை. நாட்டு மக்களிடம் பிரிவினைவாதம் கிடையாது. 

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்டத்தை சகவாழ்வினதும் நல்லிணக்கத்தினதும் மாவட்டமாக பெயரிட வேண்டும் என்ற அசோக பிரியந்த கொண்டு தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.