(வீடியோ) கட்சிப்பாடலுடன் வெற்றிகரமாக ஆரம்பமான ஹக்கீமுக்கு எதிரான ஹசன் அலியின் கூட்டம்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

 

  முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மட்டுமல்லாது பெரும்பான்மை சமூகம் பெரும்பான்மை கட்சிகள், தேசியம், சர்வதேசம் என எதிர்பார்புடன் இருந்த முஸ்லிம் காங்கிரசின் தலைமையின் சர்வதிகார போக்கிற்கு எதிராக கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலியினால் நேற்று 03.03.2017 நிந்தவூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை பரவலாக எலோரும் அறிந்த விடயமாகும். 

பல அரசியல் கெடுபிடிகளுக்கும், நீதி மன்ற தீர்ப்பிற்கும் மத்தியில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சி பாடலுடன் ஆரம்பாகிய குறித்த பொதுக் கூட்டமானது எதிர்பார்ப்பிற்கு அப்பால் பல்லாயிரக்கணகான போராளிகள் மத்தியில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டமையானது ஹசன் அலிக்கும், முஸ்லிம் காங்கிரசின் தலைமை ரவூப் ஹக்கீமிற்கு எதிரான அதிருப்தியாளர்களுக்கும் கிடைத்த  மாபெரும் வெற்றியாகவே எல்லோராலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

குறித்த பொதுக்கூட்டத்திற்கு மிக முக்கியமாக சிறீலங்கா முச்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்களாகவும் அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூர் பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்களான சட்டத்தரணி அன்சில் மற்றும் தாஹிர் ஆகியோர்களுடன் பிரதேச சபைகளின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் நடவடிக்கைகளை வழி நடாத்தி செல்லும் சமூகத்தில் உள்ள முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து மேடையில் வீட்டிருந்தமையானது ஹசன் அலிக்கும், அதிதிருப்தியாளர்களுக்கும் கிடைத்த இன்னுமொரு வெற்றியாக பார்க்கப்படுகின்றது.

இங்கு குறித்த கூட்டத்தில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகளின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் மிக விரைவில் அட்டாளச்சேனை மற்றும் நிந்தவூர் பிரதேச சபைகளின் தவிசாளர்களான சட்டத்தரனி அன்சில், தாஹிர் மற்றும் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஆகியோர்களின் முழுமையான உரைகளின் காணொளியானது பகுதி பகுதியாக பதிவேற்றப்படும் என்பதனையும் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.