474வது பொலிஸ் நிலையம் கம்பஹா மாவட்டத்தில் பெலவெலவில் திறந்து வைக்கும் நிகழ்வு..

அஷ்ரப் ஏ சமத்
474வது பொலிஸ் நிலையம் கம்பஹா மாவட்டத்தில் பெலவெலவில் 23ஆம் திகதி திறந்து வைக்கும் நிகழ்வு பொலிஸ் மா அதிபா் புஜித்த ஜயசுந்தர தலைமையில் நடைபெற்றது. . இந் நிகழ்வில்   சபாநாயகா் கருஜயசுரிய அதிதியாகக்  கலந்து கொண்டு நிலையத்தினை திறந்து வைத்தாா். இப் பொலிஸ் நிலையத்தில் நிர்வாகம், போக்கவரத்துப் பிரிவு,குற்றப்பிரிவு,  மற்றும் ஏனைய வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.   அரசின் 600 பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கும் திட்டத்தில் 474வது நிலையம் பொதுமக்களின் சேவைக்காக இப்பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மேல் மாகாண சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மாஅதிபா் நந்தன முனசிங்கவும்  கலந்து கொண்டாா்.