வறட்சியை சமாளிக்கும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க விசேட செயலணி !

எதிர்வரும் நாட்களில் ஏற்படவிருக்கும் வறட்சியை சமாளிக்கும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட செயலணி ஒன்றை ஸ்தாபித்துள்ளார். 

ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் தலைமையில் குறித்த விசேட செயலணி செயற்படுத்தப்படவுள்ளது. 

சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சுகளையும் உள்ளடக்கும் வகையில் வாராந்தம் ஒரு முறை சந்திப்புக்களை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.