இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மீது கட்டுப்பாட்டு விலையை விதிக்க தீர்மானம் !

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மீது கட்டுப்பாட்டு விலையை விதிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அதிகரித்துள்ள அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் வாரத்தில் அரிசி இறக்குமதி செய்யப்படும் என தெரிவித்தார்.