யோசித ராஜபக்ஸ கடற்படை சேவையிலிருந்து இடைநிறுத்தம் : கடற்படைத் தலைமையகம் !

யோசித ராஜபக்ஸ கடற்படை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸ் நிதி மோசடிப் புலனாய்வுப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடாக பணச்சலவை மற்றும் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்களின் கீழ் யோசித ராஜபக்ஸ கடந்த மாதம் 30ஆம் திகதி கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Mahinda Yositha Siranthi_CI

 

இந்த நிலையில் குறித்த வழக்கின் விசாரணைகளை தடையின்றி மேற்கொள்வதற்காகவே யோசிதவை கடற்படையிலிருந்து இடைநிறுத்துமாறு பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு கடற்படைத் தளபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதன் அடிப்படையில் நேற்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் யோஸித ராஜபக்ஸ கடற்படையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.