குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவர் : பிரதமர் !

கடந்த அரசாங்கத்தில் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ranil wickrama
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் குற்றம் இழைத்தவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.பாரியளவிலான நிதி மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பிலான

விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடனும், சுயாதீனமான முறையிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினரை வேட்டையாடவோ அல்லது அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலோ செயற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் நிதி மோசடிகளில் ஈடுபட்டமை குறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அரசாங்கம் முறைப்பாடு செய்தால் அதனை அரசியல் பழிவாங்கல் என கட்சிகள் பிரச்சாரம் செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளாh.